சட்டம்-ஒழுங்கு பிரச்சனையால் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு கட்டுப்பாடு அவசியமாகிறது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் 50 மாவட்டங்களில் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பேரணி விவகாரத்தில் தமிழக அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் ஆர்.எஸ்.எஸ். வழக்கறிஞர் கூறினார். இதனைக் கேட்ட தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் அதிர்ச்சி அடைந்து, தமிழகத்தில் 50 மாவட்டங்களா? நான் கேள்விப்பட்டதே இல்லை என கூறினார். பிரச்சனைகள் உள்ள இடங்களில் மட்டுமே பேரணி நடத்த அனுமதி மறுத்ததாகவும், முழுமையாக தடை விதிக்கவில்லை எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
இதையடுத்து, எந்தெந்த இடங்களில் அனுமதி தர முடியும் என்ற விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை மற்றும் தரவுகளை நீதிபதிக்கு வழங்கியதாக தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மாநில அரசின் பரிந்துரைகளையும், கருத்துக்களையும் உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என வழக்கறிஞர் தெரிவித்தார். சட்டம், ஒழுங்கு என்பது மாநில அரசின் கடமை, அதில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Next Post
அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு..!! மாணவர்களே ரெடியா இருங்க..!! இனி தினந்தோறும் கட்டாயம்..!!
Fri Mar 3 , 2023
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு மாறி வருகின்றன. அதன்படி கற்றல், கற்பித்தல் முறையில் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக நடப்பு நிகழ்வுகளை அறியும் வகையில் வாசிப்பு மற்றும் வினாடி வினா நிகழ்வுகளை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. JCERT உடன் இணைந்து பள்ளிகள் செய்தி வாசிப்பு மற்றும் வினாடி வினா நிகழ்வுகளை தினம் […]
