5000 வாடிக்கையாளர்கள்!… வேலையை விட்டுவிட்டு சூனியக்காரியாக மாறிய இளம்பெண்!… அதிர்ச்சி காரணம்!

வேல்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு அழகுக்கலை நிபுணர் ஒருவர், தனது வேலையை விட்டுவிட்டு தற்போது சூனியக்காரியாக மாறியுள்ளார். வேல்ஸ் நாட்டில் அழகுத் துறையில் பணியாற்றி வந்த ஜெசிகா கால்டுவெல் என்ற இளம்பெண், மாந்திரீகத்தின் மீதான தனது ஆர்வத்தை தொடர தனது வேலையை விட்டுவிட்டார். தனது புதிய தொழிலின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் சம்பாதிக்கிறார் ஜெசிகா. வேலையை விட்டுவிட்டு, தனது புதிய தொழிலைத் தொடங்க மந்திர புத்தகங்கள், டாரட் கார்டுகள் மற்றும் படிகங்களில் அவர் முதலீடு செய்துள்ளார்.


ஜெசிகாவுக்கு சுமார் 5,000 வாடிக்கையாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மாந்திரீகத்தில் தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி தனது மந்திர சேவைகளை ஜெசிகா வழங்குகிறார். அவர் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறார். ஜெசிகா கால்டுவெல் ஒரு அழகுக்கலை நிபுணராக இருந்ததை விட இப்போது மூன்று மடங்கு அதிகமாக சம்பாதிப்பதாக கூறுகிறார். தான் எப்போதுமே சூனியக்காரி என்றும், உள்ளுணர்வு என்பது என் அன்றாட வாழ்க்கையில் நான் பயன்படுத்தியதை நான் உணராத ஒரு சக்திவாய்ந்த கருவி என்றும் அவர் கூறினார்.

தான் முழுநேர சூனியக்காரியாக வேலை செய்யத் தொடங்கியபோது, தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கவலைப்பட்டனர் என்றும், ஆனால் நான் நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் அவர்கள் தன்னை ஆதரித்தனர் என்றும் கூறினார். கடந்த 2019-ம் ஆண்டு பேஸ்புக்கில் ஒரு அமானுஷ்ய குழுவை கண்ட பிறகு தான் மாந்திரீகத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டதாக ஜெசிகா கால்டுவெல் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் தொடர்ந்து மாந்தீரிகத்தை பற்றி, மேலும் அறியத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். 2020 முதல், தனது சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய பிறகு தனது வணிகம் கணிசமாக வளர்ந்துள்ளது. அவர் தற்போது, மிகவும் பிரபலமான சூனியக்காரி ஆனார்.

29 வயதான ஜெசிகா கால்டுவெல், தனது வாடிக்கையாளர்கள் தங்களின் காதலை பற்றி அடிக்கடி விசாரிப்பதாக தெரிவித்தார். தனது வாடிக்கையாளர்களில் சிலர் தங்கள் பார்ட்னர்கள் தன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறார்கள் என்றும், அதை பற்றி அதிகம் கேட்கின்றனர் என்றும் கூறினார். மேலும் சில சமயங்களில் அவர்களிடம் கொடூரமான உண்மையைச் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் மட்டுமே பணியாற்றும் ஜெசிகா கால்டுவெல், மந்திரங்கள் மற்றும் ஆன்மீகம் பற்றிய இலவச ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

KOKILA

Next Post

Ford இந்தியா சென்னை நிறுவன வேலைவாய்ப்பு!… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!…

Wed May 3 , 2023
சென்னையில் உள்ள ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆனது PIMS Analystகாலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள்https://www.india.ford.com/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின்பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் MCA/MBA or Equivalent Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய பதவிகளில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். […]
7 million jobs can disappear by 2050 study 1579691557

You May Like