5,369 காலியிடங்கள்..!! மத்திய அரசு வேலை..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் உள்ள 549 வகைமைகளின் கீழ் 5,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 100 வகைமைகள் பட்டப்படிப்பு நிலையிலும், 169 வகைமைகள் மேல்நிலைப்பள்ளி நிலையிலும், 280 வகைமைகள் மெட்ரிக் பள்ளி நிலையிலும் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் வரும் 27ஆம் தேதி நள்ளிரவு 11 மணி வரை இணையதளம் மூலம் சமர்பிக்கலாம். ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கணினி அடிப்படையில் நடைபெறும் தேர்வின் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பம் செய்வது எப்படி ஆகியவற்றை SSC விளம்பர அறிக்கையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

CHELLA

Next Post

”இந்த விஷயத்துக்கு ’நான்’ எப்போதும் நோ சொல்ல மாட்டேன்”...!! ’தேநீர்’ மீதான காதலை வெளிப்படுத்திய தோனி..!!

Wed Mar 8 , 2023
இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவான் கேப்டனாக வலம் வந்த தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விவசாயம், குடும்பம் என்று நிம்மதியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். மீண்டும் ஐபிஎல்-லுக்காக ப்ராக்டிஸ் செஷனில் இறங்கியுள்ள அவரது பேட்டியில் இருந்து ஒரு க்ளிப்பிங் சமீபத்தில் வைரலாகி வருகிறது. எங்காவது வெளியில் செல்லும்போது, வெளிநாடுகளுக்கு செல்லும்போது இந்தியாவின் எந்த விஷயம் உங்களுக்கு இப்போது அது கண்டிப்பாக வேண்டும் என்று தோன்ற வைக்கும் என்று கேட்கப்பட்ட […]
WhatsApp Image 2023 03 08 at 8.04.16 AM e1678242958435

You May Like