6000 ஆண்டுகள் பழமை!. 2 மலைகளுக்கு நடுவில் இப்படியொரு ரகசிய சிவன் கோயிலா?. இந்தியாவில் எங்கு இருக்கு தெரியுமா?.

Dehradun Secret Underground Temple 11zon

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் சிட்டியிலிருந்து 6.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தப்கேஷ்வர் மகாதேவ் கோவில். தன்சு ஆற்றின் (Tons river) கரையில் அமைந்துள்ள இக்கோவில் இயற்கையான குகையில் கட்டப்பட்ட கோவிலாகும். இது தப்கேஷ்வர் கோயிலை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாகும். கம்பீரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது, இந்த புனித இடத்திற்கு அழகு சேர்க்கிறது என்றால் மிகையாகாது.


கோவிலுக்கு செல்வதற்கு காடு வழியாக சிறிது தூரம் நடக்க வேண்டும். இரண்டு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் தப்கேஷ்வர் மேளாவும் நடத்தப்படுகிறது. இது டேராடூனில் மிகவும் பிரபலமான கோவிலாகும். 6000 ஆண்டுகள் பழமையான கோவில் இது. இங்குள்ள சிவலிங்கத்தின் மீது கூரையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டே இருக்கிறது. சிவலிங்கத்தின் மீது பாறை களிலிருந்து தொடர்ந்து நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டே இருப்பதால் இக் கோவிலுக்கு “தப்கேஷ்வர்” என பெயர் வந்தது.

இங்குள்ள சிவலிங்கம் தானே சுயம்புவாக வெளிப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கோவிலுக்கு அருகில் பிரம்மாண்டமான அனுமன் சிலையும் உள்ளது. பாண்டவர்கள் கௌரவர்களின் குருவான துரோணாச்சாரியார் இங்கு வசித்ததாகவும் அவர் பெயரால் இந்த குகைக்கு “துரோண குகை” என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு குரு துரோணாச்சாரியார் சிவபெருமானை தவம் செய்து “தனுர் வித்யா” ஞானம் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே இக்கோவில் சித்தி பீடமாகும் கருதப்படுகிறது. இங்கு மா வைஷ்ணோ தேவி சன்னதி உள்ளது. விநாயகர், தாத்தாத்ரேயர் போன்ற சன்னிதிகளும் உள்ளன.

இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் புனித யாத்திரை தலமாகவும் உள்ளது. இங்கு சிவராத்திரி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்று நிறைய மக்கள் வந்து ஈசனை தரிசித்து செல்கிறார்கள். மலைகளால் சூழப்பட்ட இந்த குகைக்கு முன்புறம் கந்தக நீர் ஊற்று உள்ளது. இங்கு மக்கள் நீராடிய பின்பே இறைவனை தரிசிக்கிறார்கள்.

Readmore: பேரிடி!. 7000 பேரை பதவிநீக்கம் செய்யும் ஐ.நா.!. என்ன காரணம்?. வெளியான அதிர்ச்சி தகவல்!.

1newsnationuser3

Next Post

சூப்பர் வாய்ப்பு...! 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்...! 31-ம் வேலைவாய்ப்பு முகாம்...!

Fri May 30 , 2025
சேலம் மாவட்டத்தில் வருகின்ற 31.05.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட திட்டக்குழு (FBDP) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 31.05.2025 அன்று பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, […]
Job Camp 2025

You May Like