திருவண்ணாமலை கலசப்பாக்கம் அருகே…..! தலைமை ஆசிரியர் வீட்டில் 68 சவரன் நகை திருட்டு…..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்துள்ள புது மின்னுவாம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் தேவன் (54) இவர் சிமெண்ட் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சுந்தரி( 50) இவர் காலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.


இவர்கள் இருவரும் சென்னையில் நடைபெற்ற ஒரு சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் கடந்த 19ஆம் தேதி சென்றுள்ளனர். அதன் பிறகு அவர்கள் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. அலமாரிகளின் பூட்டை உடைத்து அதிலிருந்து 68 சவரன் நகை 2 லட்சம் ரூபாய் பணம், 3 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்தது.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கலசப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதோடு விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகு மாச நாயகி வரவழைக்கப்பட்டது ஆனால் அது சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது.

ஆனாலும் தேவன் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் சிலர் கைவரிசை காட்டி இருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கலசபாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

2வது திருமணம் செய்து 8 நாட்களில் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு புதுமணத் தம்பதி தற்கொலை!

Wed May 24 , 2023
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜா (வயது 38) என்ற பெண்ணிற்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த புதன்கிழமை அன்று அவர் 2வது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) என 3 குழந்தைகள் உள்ளன. கடந்த புதன்கிழமை அன்று ஷஜி (வயது 42) என்பவரை ஸ்ரீஜா 2வது திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதி 3 குழந்தைகளுடன் ஷஜியின் […]

You May Like