குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில், 7 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை முயற்சி செய்யப்பட்ட பின்னர், அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பி சொருகப்பட்டதால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி காலை, ஜஸ்டின் பகுதியில் உள்ள அட்கோட் என்ற இடத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் தேஜ் என்ற நபர் இந்த தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் கொடூரத் தாக்குதலால் பலத்த காயம் அடைந்த சிறுமி, ராஜ்கோட் மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறையினர் உடனடியாக 10 தனிப் படைகளை அமைத்தனர். குற்றவாளியை தேடும் பணி தீவிரமாக நடந்த நிலையில், ராம் சிங்கின் புகைப்படத்தை காட்டியபோது, சிறுமி அவரை அடையாளம் காட்டினார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக ராம் சிங்கை கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.



