11 லட்சத்திற்கும் அதிகமான ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாள் போனஸ் வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது..
இந்திய ரயில்வேயில் பணிபுரியும் 11 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், தசராவுக்கு முன் 78 நாள் சம்பளத்தை போனஸாக பெற உள்ளனர்.. கடந்த 11 ஆண்டுகளாக, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் வேலை செய்ததற்கு சமமான உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட போனஸ் (PLB- productivity-linked bonus) இந்திய ரயில்வே வழங்கியுள்ளது. அதாவது தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு போன்ஸ் செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியக் கணக்கீட்டு உச்சவரம்பு மாதத்திற்கு ரூ.7,000 ஆகும். தகுதியான ரயில்வே ஊழியருக்கு 78 நாள் சம்பளம் ரூ.17,951 ஆக இருக்கும்.
ரயில்வே வாரியம் 78 நாள் போனஸ் திட்டத்தை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளது, மத்திய அமைச்சரவை இந்த வாரம் ஒப்புதல் அளிக்க உள்ளது. 2021-22 நிதியாண்டிற்கான போனஸ் மூலம் சுமார் 1.156 மில்லியன் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இதற்காக சுமார் 2,000 கோடி ரூபாய் செலவாகும். இருப்பினும், வழக்கமான 78 நாள் ஊதியத்தை விட இந்த ஆண்டு கூடுதல் போனஸ் கிடைக்கும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்பார்த்தன.
இந்திய ரயில்வே ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (என்எப்ஐஆர்) பொதுச் செயலாளர் எம்.ராகவய்யா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு எழுதிய கடிதத்தில், அனைத்துப் பிரிவு ரயில்வே ஊழியர்களையும் தொடர்ந்து அதிக அளவில் பணிபுரிய ஊக்குவிப்பதற்காக, முந்தைய ஆண்டுகளை விட பிஎல் போனஸ் வழங்குவதற்கு அதிக நாட்கள் ஊதியம் வழங்க வேண்டும்..” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.. எனவே கடந்த ஆண்டுகளை விட இந்த முறை பிஎல் போனஸ் அதிகமாக வழங்கப்படும் என்று ரயில்வே ஊழியர்கள் நம்புகின்றனர்.