80 செ.மீ. அளவுக்கு கிழக்கே சாய்ந்த பூமி!… ஆபத்து வரப்போகிறது!… எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்!

மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக பூமியானது 1993 இருந்து 2010 ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 சென்டி மீட்டர் கிழக்கே சாய்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.


1993 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மட்டும் 2,150 ஜிகா தொன் நிலத்தடி நீர் மனிதர்களால் உறிஞ்சப்பட்டு உள்ளது. இது 6 மில்லிமீட்டக்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு சமம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1993 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா ஆகிய நாடுகளில், மத்திய அட்சரேகைகளில் அதிகளவு நீர் மறுபகிர்வு செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதேசமயத்தில், பூமியின் சுழற்சி துருவமானது பொதுவாக ஒரு வருடத்திற்குள் பல மீட்டர்கள் மாற்றமடைகிறது. நிலத்தடி நீர் எடுப்பதன் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் பருவங்களை மாற்றுவதற்கான ஆபத்தை ஏற்படுத்தாது என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

1newsnationuser3

Next Post

இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிப்பு!... வெளியான அதிர்ச்சி தகவல்!

Tue Jun 20 , 2023
இந்தியாவில் 101 மில்லியன் மக்கள், அதாவது மொத்த மக்கள் தொகையில் 11.14% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சி இதழான “தி லான்செட்” நடத்திய ஆய்வில், 136 மில்லியன் மக்கள், அதாவது மொத்த மக்கள் தொகையில் 15.3% பேர், நீரிழிவு நோய்க்கு முந்தைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் இந்த நிலை பொதுவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கணக்கெடுப்பின்படி, இன்சுலின் என்ற […]
diabetes

You May Like