திருவண்ணாமலை கோயிலின் 9 கோபுரங்களும்.. அதில் அடங்கிய ஆன்மிக இரகசியமும்..!!

thiruvannamalai temple

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் இந்தியாவின் மிக முக்கியமான சிவத்தலங்களில் ஒன்றாகும். திருவண்ணாமலையின் ஆன்மிக சிறப்புகள், பெருமைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஏராளமான விஷயங்கள் இந்த தலத்திலும், அருணாச்சலேஸ்வரர் கோவிலிலும் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நம்மை ஆச்சரியப்பட வைப்பதாகவும், பல விஷயங்களுக்குள் இருக்கும் சூட்சம் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருக்கும்.


அப்படி ஒரு விஷயம் தான் திருவண்ணாமலைக்கும் ஒன்பது என்ற எண்ணுக்கும் இருக்கும் தொடர்பு. பொதுவாகவே ஆன்மிகத்தில் 9, 27, 108 என்ற எண்களுக்கு மிக அதிகமான சிறப்புகள் உள்ளன. அதிலும் 9 தெய்வீக தன்மை கொண்டதாகும். இங்கு அமைந்துள்ள ஒன்பது கோபுரங்கள், ஆன்மிகத்திலும், கட்டடக் கலைதிலும் தனிச்சிறப்பை பெற்றுள்ளன. இந்த ஒன்பது கோபுரங்களும், ‘9’ என்ற எண்ணின் பரதத்துவ ரகசியத்தையும் வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது.

இந்த கோயிலில் உள்ள ஒன்பது கோபுரங்கள் பின்வருமாறு:

  • ராஜகோபுரம் (கிழக்கு) – 217 அடி உயரம், திருக்கோயிலின் பிரதான நுழைவாயில்.
  • பேய்க் கோபுரம் (மேற்கு) – 160 அடி, மலையினை நோக்கி அமைந்தது.
  • திருமுளை வாயில் கோபுரம் (வடக்கு) – பழங்காலக் கட்டடக்கலைக்குத் தக்க சாட்சி.
  • அம்மன் சன்னதி கோபுரம்
  • சந்தான நாயகி சன்னதி கோபுரம்
  • திருமஞ்சன கோபுரம்
  • தசரா மண்டப கோபுரம்
  • சத்திய கிரகாசலம் கோபுரம்
  • வள்ளலார் சன்னதி கோபுரம்

இந்த ஒன்பது கோபுரங்களும் சிவபெருமானின் ஒன்பது சக்திகளை (நவசக்திகள்)வெளிப்படுத்துகின்றன என பக்தர்கள் நம்புகின்றனர். இது நவதுவாரபதி என்ற சாஸ்திரக் கோணத்துடன் இணைக்கப்படுகிறது. இதாவது, நம் உடலில் உள்ள 9 வாயில்களைப் போலவே இந்த திருத்தலம் ஆன்மிகமாக 9 வாயில்களால் சூழப்பட்டிருக்கிறது.

பரம்பொருள் உணர்வு, நவகிரக ஒழுங்கு, நவதுர்க்கை, நவரசம் என பல தத்துவ ரீதியான கூறுகளும் இந்த ‘9’ என்ற எண்ணில் மறைந்துள்ளன. இந்த எண்ணின் ஆன்மிக முக்கியத்துவமே, திருவண்ணாமலையில் இவ்வாறு கோபுர வடிவில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்ப்பதோடு, கார்த்திகை தீபம் போன்ற விழாக்களில் உலகமெங்கும் உள்ள பக்தர்களின் பார்வையைத் திருப்பும் புனித தலம் என்றும் கூறலாம்.

Read more: ஆபரேஷன் மகாதேவ்: ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

English Summary

9 towers in Tiruvannamalai temple: The spiritual secret contained in the number ‘nine’..!!

Next Post

புதிய விதிமுறை...! தமிழகம் முழுவதும் இனி தொழில் உரிமம் பெற கட்டணம்..! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Tue Jul 29 , 2025
தமிழகம் முழுவதும் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக விதிகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு. நகர்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் வணிக நிறுவனங்களின் குடோன்களுக்கு 700 முதல் 10 ஆயிரம் வரையிலும், மற்ற ஊராட்சிகளில் 500 முதல் 7 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் வகைபடுத்தப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு 2 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும், […]
Tn Govt 2025

You May Like