90-வது இந்திய விமானப்படை தின நாளில் விமானப்படை வீரர்களின் புதிய சீருடை வெளியிடப்பட்டுள்ளது.
சண்டிகரில் உள்ள விமானப்படைதளத்தில் 90வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வீரர்கள் அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினர். மேலும் 90வது ஆண்டு நாளான இன்று வீரர்களின் புதிய சீருடை வெளியிடப்பட்டது.
விங் கமாண்டர் குணால் கன்னா மற்றும் விமானப்படைஅதிகாரிகள் சீருடையை அறிமுகப்படுத்தினார்கள். முதல் முறையாக போர் டி-ஷர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. விமானப்படை ஸ்டாண்டிங் டிரஸ் கமிட்டி என்ற குழுவினர் சீருடையை வடிவமைத்திருக்கின்றனர். விமானப்படை மூத்த தலைமை அதிகாரி, கமாண்டர், ஏர் மார்ஷல் உள்பட மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
மூத்த இந்திய விமானப்படை அதிகாரி புதிய பேட்டர்னில் உருவாக்கப்பட்ட இந்த சீருடையை அணிந்திருந்தார். இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீருடை. நிலப்பரப்பின் வடிவத்தில் இந்த சீருடை அமைந்திருந்தது.
அப்போது ராணுவ தளபதி கூறுகையில் நீங்கள் மலைப்பகுதிகளிலோ பாலைவனத்திலோ காடுகளிலோ பணி மேற்கொள்ளும்போது இது போன்ற நிலப்பரப்புடன் ஒத்துப்போகின்றது. எனவே ராணு நடவடிக்கையின் போது மறைந்திருந்தால் இந்த சீருடை பாதுகாப்பாக இருக்கும். காலணிகளும் இலகுவானதாக இருக்கும். எனத் தெரிவித்தார்.
இந்த சீருடை , எல்லையில் பதற்றம் , மாற்றியடைக்கப்பட்ட போர் முறைகள் , தீவிர வானிலை போன்றவற்றை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. புதிய சீருடையின் முக்கியமான கூறுகள் – போர்க்கான டி.ஷர்ட் , நிலப்பரப்பை ஒத்த வகையில் தலையில் அணியக்கூடிய ஹேட், வலை பெல்ட், காலணி பூட், அதற்கு பொருந்தக்கூடிய தலைப்பாகை. சிப்பாய்கள் மறைந்திருக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துணியின் தன்மை உறுதியாகவும் , முந்தைய சீருடையை விட சிறந்ததாகவும் உள்ளது. இது பலநிலப்பரப்புகளிலும் அணியக்கூடிய பல்துறை சீருடை ஆகும்.