fbpx

விமான பயணிகளுக்கு குட்நியூஸ்.. இனி கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.. அதிரடி அறிவிப்பு…

செக்-இன் கவுண்டர்களில் போர்டிங் பாஸ் வழங்கும் போது பயணிகளுக்கு, விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் விதிக்க கூடாது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​சில விமான நிறுவனங்கள், இணையதளத்தில் செக்-இன் செய்யாவிட்டால் போர்டிங் பாஸ் வழங்குவதற்கு கூடுதலாக ரூ.200 வசூலிக்கின்றன. இந்நிலையில் இந்த கூடுதல் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று மத்திய அரச்ய் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவில் “ பயணிகளிடமிருந்து போர்டிங் பாஸ்களை வழங்குவதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் தொகையை வசூலிக்கின்றன என்பது சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது..

இந்த கூடுதல் தொகை அறிவுறுத்தல்களின் அறிவுறுத்தலின் படி இல்லை. விமான நிலைய செக்-இன் கவுன்டர்களில் போர்டிங் பாஸ் வழங்குவதற்கு கூடுதல் தொகையை வசூலிக்க வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.. ஏனெனில் விமான விதிகளின் விதி 135 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள ‘கட்டணத்தில்’ இதை கருத்தில் கொள்ள முடியாது..” என்று தெரிவித்துள்ளது..

Maha

Next Post

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்..!

Fri Jul 22 , 2022
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒரு நாள் போட்டிகள் 22, 24 மற்றும் 27ஆம் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிகள் டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி […]
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்..!

You May Like