fbpx

55,000 ஊதியத்தில் B.E முடித்த நபர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்  நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் Senior Engineer பணிக்கு B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

01.05.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC 3 ஆண்டு, SC / ST 5 ஆண்டு மற்றும் PWD 10 ஆண்டுகள் என பிரிவிற்கு ஏற்றாற்போல் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.55,000 வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=final web-advt 20-07-22.pdf

Also Read: பெண்களே… ரயில் பயணத்தின் போது உங்கள் பாதுகாப்பு இல்லையா…? உடனே இந்த எண்ணுக்கு கால் செய்யவும்…

Vignesh

Next Post

ஜூலை 25-ல் பதவியேற்கும் 10-வது ஜனாதிபதி திரௌபதி முர்மு.. 1977-ல் இருந்து தொடரும் நடைமுறை..

Mon Jul 25 , 2022
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24 அன்று முடிவடைந்துள்ளது. திரௌபதி முர்மு இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார், சுவாரஸ்யமாக, 1977 முதல் ஜூலை 25 அன்று பதவியேற்கும் 10வது ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆவார்.. 1977 முதல், அனைத்து ஜனாதிபதிகளும் ஜூலை 25-ம் தேதி பதவியேற்றதாக பதிவுகள் காட்டுகின்றன.. இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஜனவரி 26, 1950 அன்று பதவியேற்றார்.. அந்த தினத்தை தான் […]

You May Like