சமூக வலைதளங்களில் தற்போது 1980களின் ரெட்ரோ தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட AI புகைப்பட டிரெண்ட் வேகமாக வைரலாகி வருகிறது. பழைய கால உடைகள், ஹேர் ஸ்டைல் மற்றும் விண்டேஜ் புகைப்படங்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பலரும் தங்களது புகைப்படங்களை மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த டிரெண்டில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் லெஜண்ட் சரவணனும் தற்போது 80ஸ் ரெட்ரோ […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள பத்ராத்திரி கோத்தகுடேம் மாவட்டம், மாணு குரு, பாகிடேறு கொல்ல கோட்டூர் ஆகிய 3 கிராமங்களில் கிணறுகள் மற்றும் வீடுகளுக்கு வரும் குடிநீர் குழாய்களில் இருந்து திடீரென சூடான நீர் வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வழக்கமாக குடிநீருக்காக பயன்படுத்தப்படும் கிணறு மற்றும் குழாய் நீர் தற்போது மிகவும் சூடாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அன்றாட தேவைகளுக்குக்கூட அந்த நீரை உடனடியாக […]
மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் காலணிகள் நனையக்கூடாது என்பதற்காக, முதியவர் ஒருவரின் முதுகில் ஏறி சென்ற வருவாய் அதிகாரி, இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அரசு அதிகாரி மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தில் உள்ள மாதா கிராம பஞ்சாயத்து பகுதியில் கள ஆய்வுக்கு சென்ற வருவாய் அதிகாரி நிலேஷ்நம்தேவ் என்பவர் தண்ணீர் தேங்கியிருந்த […]
தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 19 பேராக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது. பன்றிக்காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்சா வைரஸால் ஏற்படும் சுவாசத் தொற்று நோயாகும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் H1N1 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. திடீரென ஏற்படும் […]
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே நீடித்து வரும் மோதலால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தெற்கு கார்டோபன் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் ஆயுதக்குழுவினர் நேற்று நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். குவார்டாட் மற்றும் அபு ஹமாமா உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதம் ஏந்திய குழுவினர் புகுந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் 4 குழந்தைகள் உட்பட மொத்தம் […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டாச்சியர் அலுவலகங்களில் நேற்று (ஜூலை 17)லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனையில் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு ,லஞ்சம் வாங்கிய பலர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லஞ்சம் வாங்குவோர் குறித்து புகார் அளிக்க வாட்ஸாப் எண் மற்றும் இமெயில் முகவரி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் நில அளவை போன்ற […]
பொதுமக்கள் மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்களுக்காக Public Grievance Portal என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,பொதுமக்கள் மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்கள் தங்களது புகார்கள் மற்றும் சந்தேகங்களை எளிதாக பதிவு செய்து தீர்வு பெறும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி CAMS இணையதளத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. தலைமை தணிக்கை இயக்குநரின்கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை, மாநில அரசு தணிக்கைத் துறை, […]
காவிரி நீர் பகிர்வு தொடர்பாக டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறை குழுக் கூட்டத்தில், தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகா தெரிவித்துள்ளது. காவிரி நீர் பகிர்வு விவகாரம் பல ஆண்டுகளாக தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையாக உள்ளது. மழை நன்றாக பெய்தால் உபரி நீரை திறந்து விடும் கர்நாடகா. பருவமழை குறைவாக இருக்கும் ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை தருவதில்லை. […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. கடந்த சில நாட்களாகவே குறைந்து வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. […]
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. “வேறு வழக்கில் கைது செய்யப்பட மாட்டேன் என்று உறுதி அளித்தால் மட்டுமே நேரில் ஆஜராக முடியும்” என போலீசாருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனை ஜாமீன் விதிகளின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் தினமும் காலை, […]

