ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணித்த மூன்று வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என கூறிய அமெரிக்கா, அதற்கு பதிலடியாக ஈரானின் 80-க்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக […]
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியா ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விலை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்ததும், உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் அதிகரித்துள்ளது. இதுவே இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், […]
வருவாய், ஜாதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் விரைவாக கிடைக்க புதிய நடைமுறையை வருவாய் துறை பரிசீலித்து வருகிறது. முழு விவரங்கள் இங்கே. வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பொதுமக்கள் விரைவாக பெறும் வகையில், வருவாய் துறை நிர்வாக நடைமுறையில் மாற்றங்களை பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், சான்றிதழ்கள் வழங்கப்படும் காலம் கணிசமாக குறையக்கூடும்.அரசின் நலத்திட்டங்கள், கல்வி சேர்க்கை, வேலைவாய்ப்பு, […]
தவெக தலைமையிலான கூட்டணி உருவானால் அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேசமயம், திமுக கூட்டணியில் இருந்து விலகியதாக தாம் அறிவிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழாவில் பேசிய திருமாவளவன், தனது அரசியல் நிலைப்பாட்டிற்கென எப்போதும் ஒரு நேர்மை இருக்கிறது. வெறும் பதவி, புகழ் அல்லது தனிப்பட்ட பலன்களுக்காக அரசியல் முடிவுகளை […]
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து முக்கிய அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. […]
பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு உருவாகியுள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது. இதனால் தமிழ் நாட்டிற்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம். எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மற்றும் காற்று அழுத்த மாற்றங்களால் உலகளாவிய வானிலை முறைகளை மாற்றியமைக்கும் ஒரு இயற்கை நிகழ்வு ஆகும். இது பொதுவாக 3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. பசிபிக் பெருங்கடலில் […]
தமிழக முதலமைச்சரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் தொகுதி மக்களுக்காக பிரத்யேக மொபைல் செயலி விரைவில் அறிமுகமாக உள்ளது. சென்னை பெரம்பூர் தொகுதி தமிழக முதல்வர் விஜய்யின் சொந்த தொகுதியாகும்.இந்த தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையில் பொதுமக்களின் கோரிக்கைகள், குறைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை நேரடியாக பதிவு செய்து, அவற்றின் நிலையை கண்காணிக்கும் வகையில் மக்களுக்காக பிரத்யேக மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெரம்பூர் சட்டமன்ற […]
இன்று நடைபெற்ற தவெக இணைப்பு விழாவில் விஜயபாஸ்கர் அணிந்து வந்த ஆடை அனைவருடைய கவனத்தையும் பெற்றுள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்தனர். அதன் பிறகு அதிமுக கட்சியை சேர்ந்த பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வில் […]
முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்த விவகாரம். தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்று பெரும் பரபராப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளுக்கு எந்தவொரு காரணத்தைக் கொண்டும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என அதிமுக தலைமை சார்பாக தேர்தல் ஆணையத்தில் அதிரடியாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்த […]
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ .சண்முகம் விரைவில் தேர்தல் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தான் தெரிய வருகிறது என கூறினார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தவெக-விற்கு வாக்களித்து புதிய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், தங்களால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போதைய முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை […]

