fbpx

காதல் மனைவியை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொன்ற கணவன்..! சிசிடிவியில் சிக்கியது எப்படி?

காதல் மனைவியை அருவிக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன் (19). இவரும் புழல் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (19) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி தமிழ்ச்செல்வி மாயமானார். இதுகுறித்து தமிழ்ச்செல்வியின் பெற்றோர், மதனிடம் விசாரித்தபோது பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், தமிழ்ச்செல்வியின் குடும்பத்தினர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே அருவிக்கு மதனும் தமிழ்ச்செல்வியும் குளிக்க சென்றதை அறிந்து கொண்டனர்.

காதல் மனைவியை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொன்ற கணவன்..! சிசிடிவியில் சிக்கியது எப்படி?

இதனால், மதன்தான் தமிழ்ச்செல்வியை கொலை செய்திருப்பார் என தலைமறைவாக இருந்த அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். பின்னர் கோனே அருவிக்கு சென்ற போலீசார் அங்கு அருவிக்கு செல்லும் பாதையில் வனத்துறையினர் வைத்துள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், மதனும் தமிழ்செல்வியும் வனத்துக்குள் செல்வது தெரியவந்தது. அதேநேரம் மதன் மட்டும் திரும்பி வந்ததும் பதிவாகியிருந்தது. பின்னர் மதனை பிடித்து விசாரித்தபோது, அருவயில் வைத்து தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திவிட்டு மதன் தப்பிவந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தமிழ்செல்வியின் சடலத்தை கண்டுபிடித்தனர். இந்நிலையில், இந்த கொலை எதற்காக நடந்தது என்பது குறித்து மதனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Chella

Next Post

#Vaccine: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,34,167 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது...!

Mon Aug 1 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,464 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 39 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 20,408 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
BF.7 கொரோனா ஒருவரிடம் இருந்து இத்தனை பேருக்கு பரவுமா..? அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்ட மருத்துவர்கள்..!!

You May Like