பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலான ”சோழா சோழா” பாடல் வெளியானது.
மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான வேலைகளில் படக்குழுவினர் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், படத்தின் பாடல்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ’பொன்னி நதி’ பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த பாடலுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், பொன்னின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது பாடலும் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பாடல் கரிகாலச் சோழன் பற்றியது எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த பாடலையும் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். முதல் பாடல் போலவே இந்த 2-வது பாடலும் நல்ல வரவேற்பை பெறும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.
தற்போது சிங்கிள் ட்ராக் முறையில் பாடல்கள் வெளியாகி வரும் நிலையில், செப்டம்பர் 6ஆம் தேதி பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தி, அதில் அனைத்து பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட உள்ளனர். அந்த விழாவில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதேபோல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.