fbpx

’இறைவனே நினைத்தாலும் தண்டனையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தப்ப முடியாது’..! டிடிவி தினகரன்

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தண்டனை பெறுவதில் இருந்து தப்ப முடியாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”சசிகலா, தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்ன கருத்து வரவேற்கதக்கது. ஆனால், சில மேதாவிகள் சுவாசமே துரோகமாக கொண்டவர்கள் நல்ல விஷயத்திற்கு ஒத்துவர மாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்வதில் அணிலை போல் செயல்படுவோம். 2023 கடைசியில் காங்கிரஸ் உடன் கூட்டணியா? அல்லது பாஜகவுடன் கூட்டணியா? என்பதை தெரிவிப்பேன்.

’இறைவனே நினைத்தாலும் தண்டனையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தப்ப முடியாது’..! டிடிவி தினகரன்

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய டிடிவி தினகரன், நீதியரசர் ஜெயச்சந்திரனின் தீர்ப்பு சட்டதிட்ட விதி அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளார். சரியான தீர்ப்பு அது தான். உச்சநீதிமன்றத்திலும் தொடரும் என்றும் தனக்கு தெரிந்த சட்ட அனுபவப்படி சொல்வதாக கூறினார். நெடுஞ்சாலை டெண்டர் வழக்கில் எடப்பாடி பழனிசாமி தண்டனை பெறுவதில் இருந்து இறைவனே நினைத்தாலும் தப்ப முடியாது என்ற அவர், எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகியாக மாறிவிட்டதாகவும், மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

Chella

Next Post

தாமதமாகும் நீட் தேர்வு முடிவுகள்..! பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு..! அமைச்சர் அறிவிப்பு

Wed Aug 24 , 2022
பொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளில் சேருவதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள 1,58,157 பேர் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டனர். மொத்தம் 1,48,811 இடங்கள் இருக்கின்றன. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு சனிக்கிழமை முதல் […]

You May Like