பாகிஸ்தானில் வரலாறுகாணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் உணவு, குடிநீர் இல்லாமல் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று அரசு கோரிக்கை வைத்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்கள் தண்ணீரில் மூழ்கின. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதுவரை வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 1200ஐக் கடந்துள்ளது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/2022-08-31T170730Z_963421851_RC227W9H4A75_RTRMADP_3_PAKISTAN-WEATHER-1024x683.jpg)
பாகிஸ்தான் அரசு பொதுமக்களுக்கு உதவும் வகையில் 7 லட்சம் குடும்பங்களுக்கு இந்திய மதிப்பில் தலா 25,000 ரூ. வழங்கியுள்ளது. தொடர்ந்து இதே நிலை தொடர்வதால் பொதுமக்கள் உண்ண உணவு , குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று அரசு வேண்டுகோள் வைத்துள்ளது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/images-1.jpg)
வரலாறு காணாத வெள்ளத்திற்கு என்ன காரணம் ? விஞ்ஞானிகள் விளக்கம் ….
இது போன்ற வரலாறு காணாத வெள்ளத்தை பாகிஸ்தான் இதுவரை சந்தித்ததில்லை என கூறப்படுகின்றது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றது. இந்த மாற்றத்தால் இமயமயைின் பனிப்பாறைகள் உருகுவதாகவும் இது கூட பாகிஸ்தானில் வெள்ளத்திற்கு காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இமயலமலைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் சிலர் கடந்த சில ஆண்டுகளாக பனிப்பாறையின் அளவு பற்றியும் எவ்வளவு குறைந்துள்ளது. என்பது குறித்தும் தகவல்கள் வெளியிடுவார்கள். ஆனால் , இந்த ஆண்டு ஆய்வுப் பணியை மேற்கொள்ளமுடியவில்லையாம் , காரணம் பனிப்பாறை உருகியதில் வெள்ளித்தில் அலுவலகம் அடித்துச் செல்லப்பட்டு விட்டது என்று கவலைதெரிவித்துள்ளனர்.