fbpx

கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு… விசைப்படகு கடலில் கவிழ்ந்ததால் விபத்து

நாகை அருகே கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 மீனவர்களை மற்றொரு விசைப்படகில் வந்தவர்கள் காப்பாற்றினர். …

நாகை மாவட்டம் கீச்சங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் ஞானபிரகாசம் , ராஜகுமார் , செண்பகம் , மனோ. இவர்கள் விசைப்படகு ஒன்றில் நாகை அருகே மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென விசைப்படகில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் விசைப்படகிற்குள் சென்றது.

அதிர்ச்சியடைந்த மீனவர்கள் ஓட்டையை அடைக்க முயன்றனர் . ஆனால் முடியவில்லை தண்ணீர் விசைப்படகிற்குள் புகுந்து படகு கவிழ்ந்தது . தண்ணீரில் விழுந்த 4 மீனவர்களும் தத்தளித்துக்கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு விசைப்படகில் சில மீனவர்கள் வந்துள்ளனர். தண்ணீரில் தத்தளித்தவர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தண்ணீரில் குதித்து மீனவர்கள் நான்கு பேரையும் காப்பாற்றி கரையில் சேர்த்தனர்.

Next Post

விமான போக்குவரத்து கழகத்தில்... காலி பணியிடங்களுக்கு 10, 12-ஆம் முடித்தவர்களுக்கு.. வேலை வாய்ப்பு...!

Sat Sep 10 , 2022
புதுடெல்லி, இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்நிலையில் மொத்தம் 156 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் நடைமுறை ஆரம்பித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கான அதிகாரப்பூர்வ, aai.aero என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30-ஆம் தேதியாகும். மொத்த காலி பணியிடங்கள்: 156 இளநிலை உதவி (தீயணைப்பு பிரிவு): 132இளநிலை உதவி (அலுவலகம்): […]

You May Like