காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் கூறியுள்ளது:-
புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல் நிலையங்களில் இருப்பவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். புகார் அளிப்பவர்களிடம் சரியான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். சில காவல் அதிகாரிகள் எதிர்மறையான சிந்தனையுடன் இருக்கின்றனர். புகார்தாரர்கள் சில சமயங்களில் உயர் அதிகாரிகளை சந்தித்திருந்தால் அதனை அவர்களிடம் சுட்டிக்காட்டி பேசக்கூடாது.
புகார் அளிப்பவர்களிடம் துன்புறுத்தும் வகையில் நடந்து கொள்வது காவல் துறை மீதான நன்மதிப்பை குறைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். காவல் துறைக்கான அதிகாரம் என்பது ஒரு பொறுப்பு என்பதை அதிகாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.