fbpx

நீட் தேர்வு முடிவுகள்..! தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில், புதிய விவரங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டன. இதில், தமிழ்நாடு மாணவ, மாணவிகள் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில், புதிய விவரங்ளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள்..! தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

அதில், 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். 12,840 பேரில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைவாகும். பெரும்பாலான மாவட்டங்களில் 20% முதல் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 7% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 131 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அங்கு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 100% ஆகும்.

நீட் தேர்வு முடிவுகள்..! தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

சென்னையில் தேர்வு எழுதிய 172 பேரில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களிலும் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 8,061 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 1,957 பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு.. உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு...

Mon Sep 12 , 2022
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 51 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.. ஆர்.எஸ்.எஸ் உடையணிந்து, பேண்டு வாத்தியத்துடன் ஊர்வலம் செல்ல அனுமதி கோரி தமிழக காவல்துறையிடம் விண்ணப்பித்தாகவும், அதில் பெரும்பாலான இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.. மேலும் பல இடங்களில் […]
இனியும் சும்மா இருக்க மாட்டோம்..! கொந்தளித்த தமிழக அரசு..! கடைகள் மீது பாயும் அதிரடி நடவடிக்கை..!

You May Like