கோவை, பொள்ளாட்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு போன்ற இடங்களில் பாஜக அலுவலகம் மற்றும், நிர்வாகிகள் வீடு, கார், கடைகளுக்கு, பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடடந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை தாக்குதல்கள் குறித்தும், தமிழகத்தில் தேச பாதுகாப்பு அச்சறுத்தல்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி இருக்கிறார்.
.
தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 இடங்களில் தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். வகுப்புவாத சக்திகளுக்கு துணை நிற்கும் தமிழக அரசின் தவறான நிலைப்பாடுகளை எல்லாம் ஆதாரங்களுடன் ஆவண விளக்கங்களுடன் சுட்டிக்காட்டி அமித் ஷாவுக்கு அனுப்பி இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.