நாடு முழுவதும் 497 ரயில் நிலையங்களில் க் வயதானவர்களுக்கு மின் படிக்கட்டுகள்…! மத்திய அரசு

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக மின் தூக்கிகள் மற்றும் மின் படிக்கட்டுகளை இந்திய ரயில்வே அமைத்துள்ளது.


இதுவரை, 497 ரயில் நிலையங்களில் மின் தூக்கிகள் அல்லது மின் படிக்கட்டுகள் வசதி செய்யப்பட்டுள்ளது. மின்படிக்கட்டுகள்: 10லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநில தலைநகரங்கள், நகரங்கள் அல்லது நாள் ஒன்றுக்கு 25,000 பேர் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் மின் படிக்கட்டுகளை ரயில்வே நிறுவியுள்ளது.இதுவரை, ஆகஸ்ட் ,2022 ன் படி, 339 நிலையங்களில், 1090 மின் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மின்தூக்கிகள்: பயணிகளின் எண்ணிக்கை, இடவசதியைப் பொறுத்து குறிப்பிட்ட நிலையங்களில்/ நடைமேடைகளில் மண்டல ரயில்வே மின்தூக்கிகளை அமைக்கிறது. இதுவரை, ஆகஸ்ட் 2022ன் படி 400 நிலையங்களில் 981 மின் தூக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

வரும் ஜனவரி 1 முதல் இது கட்டாயம்.. போலி ஸ்மார்ட்போன்களின் விற்பனையை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..

Wed Sep 28 , 2022
இந்தியாவில் போலியான IMEI எண்களுடன் லட்சக்கணக்கான ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஃபீச்சர் போன்கள் இருப்பதாக கூறப்படுகிறது.. இதனை தடுக்கவும் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் மத்திய அரசு புதிய விதியை கொண்டு வந்துள்ளது.. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1, முதல் அனைத்து மொபைல் ஃபோன் உற்பத்தி நிறுவனங்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மொபைல் போனின் IMEI எண்ணையும், அதனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முன்பு, […]
மக்களே உஷார்..!! பழுது நீக்குவதற்காக சிம் கார்டுடன் செல்போனை கொடுத்த நபர்..!! ரூ.2 லட்சம் அபேஸ்..!!

You May Like