6ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை ஆசிரியர் கரும்புகளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கும்லாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர், 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை கரும்புகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, மாணவர்கள் தனது உத்தரவின் படி நடனமாட மறுத்ததால் கோபமடைந்த ஆசிரியர், மாணவர்களை கரும்புகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 6ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளியின் வகுப்பறைக்குள் அடைத்து வைக்கப்பட்டதாகவும், காயமடைந்த 13 மாணவர்களும் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளிக்கு எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.