ஆயுதபூஜை , விஜயதசமயை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை கொண்டாடப்படுகின்றது. 2022 ம் ஆண்டிற்கான பொது விடுமுறையின் கீழ் இந்த இரண்டு நாட்களும் ஏற்கனவே பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்மற்றும் தன்னுடன் இணைந்த பிற பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. சனி ஞாயிறு ஏற்கனவே விடுமுறை நாட்களாக உள்ளதால் கூடுதலாக திங்கள் கிழமை 3ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.
இதற்கு பதிலாக சனிக்கிழமை 8ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி , ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை என விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஊருக்கு செல்ல நாள்தோறும் 2100 சிறப்பு பேருந்துகளுடன் கூடுதலாக 2050 சிறப்புபேருந்துகள் இயக்கபடுகின்றது. இதேபோல பல நிறுவனங்களும் 5 நாட்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.