கல்லீரல் புற்றுநோய் இறப்புகள் 2040 ம் ஆண்டில் 55 சதவீதம் அதிகரித்து இருக்கும் … ஆய்வில் அதிர்ச்சி தகவல் ..

இறப்பிற்கான காரணங்கள் குறித்த ஆய்வில் கடந்த 2020 ம் ஆண்டில் 46 நாடுகளில் புற்றோய் இறப்புக்கான மூன்று காரணங்களில் முதலாவதாக கல்லீரல் புற்றுநோய் உள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியானது.

வரும் 2040 ம் ஆண்டில் இறப்பு மற்றும் நோய் கண்டறிதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை இதை விட 55 சதவீதம் அதிகமாகும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த ஆய்வு தொடர்பாக ஹெபட்டாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. நோயைக் கட்டுப்படுத்தும் நடவடி்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கல்லீரல் புற்று

மூத்த எழுத்தாளர்கள் இசபெல்லே சோர்ஜோமாத்தரம் என்ற ஆராய்ச்சியாளர் புற்று நோய் கண்காணிப்பு பிரிவின் லியோன், பிரான்ஸ் கூறுகையில் ’’ கல்லீரல் புற்று நோய் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் நோய்களின் பெரும் சுமையை உருவாக்குகின்றது. ’’ ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ்கள் , மது அருந்துதகள் , அதிக உடல் எடை மற்றும் டைப் 2 நீரிழிவு உள்ளிட்ட வளர்சிதை மாற்ற நோய்கள் ஆகியவை நோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகள். இதை கட்டுப்படுத்த முயற்சி எடுக்கவில்லை என்றால் தீவிரமாகும் என எச்சரித்துள்ளார்.

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட உலகளாவிய புற்று நோய்கள் மற்றும் இறப்பு மதிப்பீடுகள் பற்றி, கல்லீரல் புற்று நோயின் பாதிப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மதிப்பீடு குறித்து தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு திட்டமிடல் அத்தியாவசிய கருவியை உருவாக்க விரும்புவதாக புற்று நோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் , தெரிவித்துள்ளத. இதில் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் புற்று நோய் கண்டறிதல் இறப்புகளுக்கான அனைத்து புற்று நோய் வகைகளிலும் கல்லீரல் புற்று நோய் எங்கு உள்ளது என்பதை நாங்கள் விவரிக்கின்றோம். 2040 ம் ஆண்டில் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு பற்றி கணிப்புகளையும் அவர்கள் வழங்கியுள்ளதாக கூறினர்.

உலகளவில் 185 நாடுகளில் 36 புற்று நோய் வகைகளக்கு மதிப்பீடுகளை உருவாக்கியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் கணிப்புபடி 2040 ல் புற்றுநோய் நோயாளிகள் அல்லது எண்ணிக்கையில் திட்டமிடப்பட்ட மாற்றத்தை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உலக அளவில் 830,200 பேர் கல்லீரல் புற்று நோயால் இறப்பார்கள். 905,700 பேர் இவ்வகை புற்று நோயால் பாதிக்கப்படுவார்கள். தற்போது 46 நாடுகளில் புற்றுநோயால் இறக்கும் 3 காரணங்களில் கல்லீரல் புற்றுநோயும் ஒன்று. 100 நாடுகளில் முதல் 5 காரணங்களில் இப்புற்று நோயும் ஒன்று.

கிழக்கு ஆசியா , வட ஆப்பிரிக்கா , தென்கிழக்கு ஆசியாவில் கல்லீரல் புற்று நோய் மிகப்பெரிய அளவில் கண்டறியப்படுகின்றது. இறப்பு விகிதங்களை பொறுத்தவகையில் அதிகம் . தற்போதைய விகிதங்கள் மாறவில்லை என்றாலும் அடுத்த 20 ஆண்டுகளில் புதிதாக நோய்த்தோன்றல் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை 55 சதவீதம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு இந்த வகை புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சற்று கவலை அடையச் செய்துள்ளது. இது போன்றவற்றை தவிர்க்க உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இந்த பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் அதிகரிப்பை தவிர்க்க , தடுப்பு மற்றும் இறப்பு விகிதங்களில் குறைந்தது 3 சதவீதம் வருடாந்திர சரிவை அடைய வேண்டும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே நோய்த்தடுப்பு உத்திகளை மேம்படுத்த வேண்டும்.

ஹெபாடைட்டிஸ் பி வைரசிற்கான தடுப்பூசி பரிசோதனை மற்றும் சிகிச்சை போன்ற கல்லீரல் புற்று நோயை தடுக்கும் தற்போதைய நடவடிக்கைளை வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான் ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற கணக்கில் பாதிப்புகளை குறைக்க முடியும். நோய்த்தடுப்பு சிகிச்சைக்கான அணுகள் உள்பட புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்தல் போன்ற தேவைகள் அதிகம் உள்ளது. ஆண்டுதோறும் 5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அல்லது இந்த மதிப்பு அதிகரிக்க கூடும் என எச்சரித்துள்ளனர்.

Next Post

தொடங்கிய பருவமழை... அனைத்து பள்ளிகளுக்கும் இது கட்டாயம்...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Fri Oct 7 , 2022
வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ‘அனைத்து வகைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பணியாளர்கள் பாதுகாப்புசார்ந்து வடகிழக்குப்பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள திறந்தநிலை கிணறுகள், நீர்நிலைத் தொட்டிகள், இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்கள், மற்றும் சுற்றுச்சுவர் எதேனும் இருப்பின் அவற்றை […]
school leave rain

You May Like