பெங்களூரு சாலையில் உருவான திடீர் குகைகள்… வாகன ஓட்டிகள் புலம்பல்…

பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் திடீர் குகைகளாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் புலம்பித்தள்ளுகின்றனர்.

பெங்களூருவில் புதிய குண்டலஹள்ளியில் அண்டர்பாஸ் சாலைகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் புதியதாக போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே பெயர்ந்த நிலையில் குகைகள் போல பெரிய பெரிய ஓட்டைகளுடன் காட்சி அளிக்கின்றது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக உள்ளது. சுமார் ரூ.19.45 கோடியில் பெங்களூரு மாநகர பலிக்கே புதுப்பித்தது. ஆனால் அதன் இன்றைய நிலை பேசுபொருளாகியுள்ளது.


இந்த சர்வீஸ் சாலையின் ஒருபக்கம் திடீரென இடிந்து விழுந்ததையடுத்து சமூக வலைத்தலங்களில் இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றது. சேதமடைந்த சாலையைச் சுற்றி வாகனங்கள் செல்லும் போது சாலை குகை போல இருப்பதை புகைப்படத்தில் காணமுடிகின்றது.

இத்தனை கோடிகள் செலவிட்டு போடப்பட்டசாலையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதால்தான் இந்த பள்ளம் தோன்றி உள்ளது. என்று பெங்ளூரு மகாநகர பலிக்கே குடிநீர் வழங்கல் துறையை குற்றம்சாட்டியுள்ளது. அதாவது சாலை தரமாக போட்டும்.. குடிநீர் வழங்கல் குழாயில் கசிவால்தான் சாலை சேதமாகி இருக்கின்றதாம். இல்லை என்றால்இந்த தரமான சாலை பல ஆண்டுகளுக்கும் எதுவும் ஆகியிருக்காது என்பது போல பெங்களூ மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த பாதை ஐடி நிறுவனங்களுக்கு செல்லக்கூடிய மிக முக்கியமான பாதையாகும். உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு சரி செய்யும் முயற்சியில் ஊழியர்கள் இறங்கினர். இதனிடையே பிரதான பகுதியான சேட்டிலைட் சாலையிலும் இதே போன்ற பள்ளம் உருவானது என டுவிட்டரில் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Post

கடலை கொடுக்க சென்ற சிறுமியை கடத்திச் சென்ற கொடூரன்..!! காட்டுக்குள் தூக்கிச் சென்று கற்பழிக்க முயன்ற சம்பவம்..!!

Mon Oct 10 , 2022
திருத்தணி அருகே 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை, பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தாமநெறி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவருக்கு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் ஏழுமலை வேர்க்கடலை பயிர் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று […]
’சிறுமியின் உள்ளாடையை கழற்ற சொல்வதும் கற்பழிப்புக்கு சமம் தான்’..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

You May Like