தாயின் கண்முன் நடந்த பயங்கரம்.. சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை…

            ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் மைனர் சிறுமி ஒருவர் தனது தாய்க்கு முன்பாக ஐந்து பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியும் அவரது தாயும் ஞாயிற்றுக்கிழமை தியோகரில் ஒரு விழாவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மதுபூர் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மர்மநபர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில்   அளித்த புகாரில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் அவர்கள் இருவரையும் வழிமறித்து, பின்னர் தனது மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.  அவர்களைத் தடுக்க முற்பட்டபோது, ​​அ தாக்கப்பட்டதாகவும், பின்னர் சிறுமியை அவர் கண்முன்னே கற்பழித்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக , காவல் கண்காணிப்பாளர்  சுபாஷ் சந்திர ஜாட் கூறுகையில், சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது, அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.வந்ததும் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றவாளிகளில் இருவரை அடையாளம் கண்டுள்ளதாகவும் மூவரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Post

அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமர் பாலம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

Tue Oct 11 , 2022
பாலிவுட் நடிகரான அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமர் பாலம்’. இந்த படத்தை அபிஷேக் சர்மா என்பவர் இயக்கியுள்ளார். அக்ஷய்குமாருடன் இந்த படத்தில் ஜாக்லின், நஷ்ரத், சத்யதேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ராமாயணத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சென்று சீதையை ராமர் மீட்டார் என்பது வரலாறு. அப்போது கடல் வழியாக செல்வதற்கு மிதக்கும் பாலம் ஒன்றை ராமர் கட்டியதாக சொல்லப்படுகிறது. 7 ஆயிரம் வருடத்திற்கு முன்னர் கட்டப்பட்ட […]
ramar palam

You May Like