ஒரு டிக்கெட்டை வைத்து 5 முறை பயணம் செய்யலாம் ! எந்த மாநகரம் தெரியுமா?

தீபாவளி சலுகையாக ஒரு டிக்கெட்டை வைத்து 5 முறை இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டதால்மக்கள் குஷியாக உள்ளனர்.

தீபாவளியை ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கி வருகின்றன. ஆன்லைன் இ.காமர்ஸ் நிறுவனங்கள் கூட இது மாதிரியான சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் மும்பை மாநகரத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


ஒரு டிக்கெட்டை வைத்து 5 முறை பயணம் செய்யலாம் என்ற அந்த அறிவிப்புதான் அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிஜிட்டல் பயணச்சீட்டுகளை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள பேருந்துகளில் அடுத்த தீபாவளி வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்களும் இந்த பயணச்சீட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை 9 ரூ. என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 7 நாட்கள் எந்த வழித்தடத்தில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை விலை அனைத்து விதமான பேருந்துகளிலும் பொருந்தும் எனவும் குளிர்சாதன பேருந்துகளில் கூட பொருந்தும்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

’டயானா உயிரோடு இருந்திருந்தால் பெருமைபட்டிருப்பார்’  இளவரசர் ஹேரியிடம் செவிலியர் கூறிய தகவல்…

Wed Oct 12 , 2022
செவிலியர் ஒருவர் இளவரசர் ஹேரியிடம் , ’’ டயானா உயிரோடு இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பார்’’ என கூறிய நொடியில் கலங்கிப்போனார் ஹேரி.. லண்டனில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. ஹேரியின் தாய் டயானாவைப் போலவே  தொண்டுள்ளம் கொண்டவர் ஹேரி. அவர் அடிக்கடி தொண்டு நிறுவனங்களுக்கு சென்று வருவார். அவர்களுக்கான உதவிகளையும் ஹேரி செய்வது வழக்கம். மேலும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஹேரி மனைவி மேகனுடன் கலந்து கொள்வார். இதுபோன்ற ஒரு […]
Prince Harry Meghan Markle 1200

You May Like