சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலின் முன் இளம்பெண் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ் (23). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. கல்லூரி மாணவியான சத்தியாவை சதீஷ் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் சதீஷும் சத்யாவும் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரயில்நிலையத்திற்கு வந்த ரயிலின் முன் திடீரென சதியாவை, சதீஷ் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, ரயிலில் சிக்கிய சத்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்த வந்த ரயில்வே போலீசார், மாணவி சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்யாவை சதீஷ் என்ற இளைஞர் தள்ளிவிட்டு கொன்றதாக பெண்ணின் உறவினர்கள் புகார் கூறிய நிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.