ராணுவத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் , பேருந்துகள் பயன்படுத்த திட்டம் !

ராணுவத்தில் பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட சில துறைகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.


ராணுவத்தில் நீண்ட தொலைவில் உள்ள பணிகள் , ராணுவத்தில் உள்ள பணிகள் போன்றவற்றின் தனித்துவ செயல்பாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் வெளியேற்றத்தை குறைக்கும் வகையில் 3 வித வாகனங்கள் ராணுவத்தில் ஈடுபடுத்தப்படும். மோட்டார் சைக்கில் , இலகுரக வாகனங்கள் , பேருந்துகள் வாங்க உள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பிரிவுகளில் இலகுரக வாகனங்கள் 25 சதவீதமும் , பேருந்துகளில் 38 சதவீதமும் , மோட்டார் சைக்கிள்களில் 48 சதவீதமும் தற்போதைக்கு எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மின்ஏற்றி நிலைய அமைப்புகளும் ஏற்படுத்தப்படும். ராணுவத்தளங்களில் அந்தந்த பணிகளுக்கு ஏற்றவாறு இவை பயன்படுத்தப்பட உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள் புதுடில்லியில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. இவை லக்னோ வரை நீட்டிக்கப்பட உள்ளது. பின்னர் அடுத்தடுத்து புனே, கல்கத்தா, போன்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னேற்பாடாக மின்னேற்றி நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மேலும் வாகனங்களை நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டு வருகின்றது. ராணுவ குடியிருப்பு பகுதிகளில் தேவையான மின்ஏற்றி நிலையங்கள் மற்றும் ட்ரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் சூரிய மின்னேற்றிகளையும் அமைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பசுமையாக அமைதியான பகுதிகளை உண்டாக்கு முயற்சியாக இதை முன்னெடுத்து வருவதாகவும், அரசு , எரிபொருள்ளை சார்ந்திருப்பதை குறைக்கும் முயற்சியாக இதை செய்வதாகவும். மாறிவரும் காலக்கட்டத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

முதலில் 60 பேருந்துகள் 24 அதிவேக மின்ஏற்றியுடன் வாங்க டெண்டர் கோரப்பட உள்ளது . விரைவில்இதற்கான தகவல்கள் வெளியிடப்பட உள்ளது. இதனிடையே ராணுவம் சிவில் வாடகை போக்குவரத்தின் ஒரு பகுதியாக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது என கூறப்படுகின்றது.

’’இந்த முழு சமூகத்திற்கும் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது கால நிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு இந்த அணுகுமுறை மிகச் சிறந்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் தற்போது வளர்ந்து வரும் , வாகனங்களின் உமிழ் ஆற்றல் வளர்ச்சியைக் குறைக்கும் என இந்தியாவின் கால நிலை திட்ட இயக்குனர் உல்கா கேல்கர் தெரிவித்துள்ளார்.

Next Post

உக்ரைன் நேட்டோவில் இணைவது 3-ம் உலக்போருக்கு வழிவகுக்கும்.!

Thu Oct 13 , 2022
உக்ரைன் நேட்டோவில் இணைவது மூன்றாவது உலகப்போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 18 சதவீத உக்ரைனின் பகுதிகளை இணைத்துக்கொள்வதாக அறிவித்திருந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு நேட்டோவில் உக்ரைன் சேர்ந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பை அறிவித்திருந்தது. உக்ரைன் அமெரிக்காவின் நேட்டோபடையில் இணைவது உலகப்போர் 3-க்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது. ரஷ்யன் பாதுகாப்பு அதிகாரி கூறுகையில் ’’ரஷ்ய அதிபர் […]
அதிபர் விளாடிமிர் புடின் இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார்..? உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

You May Like