உக்ரைன் நேட்டோவில் இணைவது மூன்றாவது உலகப்போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 18 சதவீத உக்ரைனின் பகுதிகளை இணைத்துக்கொள்வதாக அறிவித்திருந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு நேட்டோவில் உக்ரைன் சேர்ந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பை அறிவித்திருந்தது.
உக்ரைன் அமெரிக்காவின் நேட்டோபடையில் இணைவது உலகப்போர் 3-க்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது. ரஷ்யன் பாதுகாப்பு அதிகாரி கூறுகையில் ’’ரஷ்ய அதிபர் புதின அறிவிப்பு வெளியிட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜெலன்ஸ்கியின் அறிவிப்பு ஆச்சர்யமாக உள்ளது. நேட்டோ படையில் உறுப்பினராக இணைவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இதில் உறுப்பினராவதற்கு சுமார் 30 பேர் அனுமதி அளிக்க வேண்டும்.
ஒருவேளை சம்மதம் தெரிவித்தால் அத்தகைய நடவடிக்கையானது மூன்றாம் உலகப்போருக்கு உத்திரவாதம் அளிக்கும் என்பதை கியூவ் நன்கு அறிவார் ரஷ்ய பாதுகாப்பு சபையின் துணைச் செயலாள் அலெக்சாண்டர் வெனேடிக்டோவ் கூறியதை டாஸ் மேற்கோள் காட்டியுள்ளது.
நேட்டோவில் உக்ரேனிய உறுப்பினர்கள் விண்ணப்பம் செய்திருப்பதை மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு பிரசாரம்தான் என உணர வேண்டும் புதின் கூட்டாளியான பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலாய் பட்ரூஷ் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு தங்கள் கூட்டமைப்புக்குள் இடம் தருவது என்பது தற்கொலைக்கு சமமானது என்று நேட்டோ நாடுகளுக்கே தெரியும்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா மிகப்பெரிய அணு சக்திகளாக உள்ளன. 90 சதவீதத்திற்கும்மேல் அணு ஆயுதங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் .
ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் உக்ரைன் அழைப்பு விடுத்தது ஆபத்தானது என வெனடிக்டோவ் தெரிவித்துள்ளார். அணுசக்தி யுத்தம் உலகிற்கு பேரழிவு எனவும் கூறியுள்ளார். அணுசக்தி போர் உலகம் முழுவதையும் பாதிக்கும். ரஷ்யா மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பாதிப்பை சந்திக்கும் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.