எலக்ட்ரிக் பைக் திடீரென திகு தீகுவென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உரிமையார் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் அம்மன் நகரைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் தனது எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போட்டுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் இணைப்பை துண்டித்துவிட்டு வேலைக்கு செல்வதற்காக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்துள்ளார்.
ஆனால் வண்டி ஸ்டார்ட் ஆனதோடு திடீரென திகு திகுவென தீப்பற்றி வாகனம் முழுக்க எரிந்தது. இதைக் கண்ட வரதராஜன் வண்டியை போட்டுவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடித்துள்ளார்.
வாகனம் கொளுந்துவிட்டெறிவதைக் கண்ட மக்கள் உடனடியாக சென்று தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். அதற்குள் தீக்கு இரையானது . தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் சாம்பலாக காட்சியளித்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பானது.
கடந்த சில நாட்களாக இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றது. மும்பையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தீக்கு பலியானது. ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்த மற்றொரு சம்பவத்தில் தந்தையும் மகளும் பலியானார்கள். தற்போதுநடந்துள்ள இந்த சம்பவம் எலக்ட்ரிக் பைக்கை வாங்குபவர்களுக்கு முட்டுக் கட்டையாக உள்ளது.