தீபாவளி நெருங்கும் நேரத்தில் ரயில்வே துறை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது பற்றிய அதிர்ச்சியான தகலை வெளியிட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே நடைமேடை டிக்கெட்டை உயர்த்தியது. இந்நிலையில் பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிக்கும் வகையில் மீண்டும் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியன் ரயில்வே , பண்டிகைக்காலத்தில் கூட திட்டமிட்டு விலை உயர்த்தியுள்ளது நடுத்தர மக்களை கலங்கச் செய்துள்ளது.
ஏற்கனவே பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்து வருகின்றது. ஏற்கனவே இருமடங்காக உயர்த்தி விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது பிளாட்பாரம் டிக்கெட் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.தற்போது இது 30 ஆக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியன் ரயில்வே 20 ரூபாய் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையின் போது பிளாட்பார்மில் அதிக கூட்டத்தை குறைக்கும் வகையில் பிளாட்பார் டிக்கெட்டின் விலை 10 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.