12 மணிக்கு வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.10 லட்சம்..!! 2 மணிக்கு மாயமான ரூ.5 லட்சம்..!! பரபரப்பு சம்பவம்

மதியம் 12 மணிக்கு வங்கிக் கணக்கிற்கு லோன் பணம் ரூ.10 லட்சம் கிரெடிட் ஆன நிலையில், மதியம் 2 மணிக்கு ரூ.5 லட்சம் மாயமான சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் மதுரா கோட்ஸ் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சரவணமுருகன். இவர் ஸ்ரீ வாரி டெக்னிக்ஸ் என்ற பெயரில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு பொருள் விநியோகம் செய்து வருகிறார். அதற்காக அனல்மின் நிலைய கனரா வங்கிக் கிளையில் நடப்பு கணக்கின் கீழ் Bill Discount Scheme என்ற லோன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதன்படி, 14.09.2022 அன்று பகலில் 12.19 மணிக்கு சரவணமுருகன் வங்கிக் கணக்கிற்கு லோன் தொகை ரூபாய் 10 லட்சம் கிரெடிட் ஆகியுள்ளது.

12 மணிக்கு வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.10 லட்சம்..!! 2 மணிக்கு மாயமான ரூ.5 லட்சம்..!! பரபரப்பு சம்பவம்

ஆனால், அன்றைய தினத்திலேயே மதியம் 02.53 மணிக்கு (ரூ.5 ஆயிரம்), 02.55 மணிக்கு (ரூ.1), 02.56 மணிக்கு (ரூ.4,94,990) என்று மொத்தம் ரூ. 4,99,991 சரவணமுருகன் அனுமதியின்றி வங்கி கணக்கிலிருந்து டெபிட் ஆகியுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த சரவணமுருகன் கனரா வங்கி சென்று தனது பணம் ரூபாய் 4,99,991/- டெபிட் ஆனது தொடர்பாக விசாரித்தபோது Mobile Banking மூலமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக வங்கியில் இருந்து தெரிவித்துள்ளனர். ஆனால் சரவணமுருகன் Mobile Banking, Internet Banking எதுவும் பயன்படுத்தவில்லை என்பதாலும், அவருக்கு தெரியமாலும் அவரின் அனுமதியின்றியும் பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதால், ஏமாற்றிய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து இழந்த தனது பணத்தை மீட்டுத் தரும்படி National cybercrime Portal என்ற சைபர் கிரைம் இணைய தள முகவரியில் புகார் பதிவு செய்துள்ளார்.

12 மணிக்கு வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.10 லட்சம்..!! 2 மணிக்கு மாயமான ரூ.5 லட்சம்..!! பரபரப்பு சம்பவம்

புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சைபர் குற்றப் பிரிவு காவல் சிவசங்கரன் மற்றும் போலீசாருக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, கனரா வங்கிக்கு விபரங்கள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியதன் அடிப்படையில் வங்கியிலிருந்து நடவடிக்கை மேற்கொண்டு சரவணமுருகன் இழந்த பணம் அவருக்கு தெரியாமல் சென்றுள்ளதால், காப்பீடு மூலமாக இழந்த பணத்தை சரவணமுருகனின் கணக்கிற்கு வங்கியிலிருந்து திரும்ப வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

CHELLA

Next Post

நெருங்கிய தீபாவளி... ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு...!

Thu Oct 20 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,141 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,005 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]
அதிகரிக்கும் கொரோனா..! இந்தியாவில் 4-வது அலையா..? மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரபரப்பு தகவல்..!

You May Like