நாட்டையே உலுக்கிய குர்கான் பள்ளி கொலை : குற்றவாளிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

செப்டம்பர் 2017ம் ஆண்டு குர்கானில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் ரியான் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தான்.


இந்த வழக்கில் அதே பள்ளியைச் சேர்ந்த மூத்த மாணவர் இவர் 11ம் வகுப்பு படித்து வந்தார் அவர் கைது செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது . கொலை நடந்தபோது அந்த மாணவன் சிறுவனாக இருந்தான். இந்நிலையில் அவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம் .

சம்பவம் நடந்த போது சில மாதங்களுக்கு முன்பு பள்ளிப் பேருந்து நடத்துடனராக பணிபுரிந்த நபரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றதாகவும் பின்னர் பள்ளி மாணவர் அங்கு வந்ததால் குழந்தை என பாராமல் கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு . அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் முந்தைய மரணத்திற்கு பின் கூர்மையான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தப்பட்டு ரத்தக்கசிவு இருந்துள்ளது எனவே இயல்பாக மரணத்தை ஏற்பட்டுள்ளது. நடத்துடனரின் பேருந்தின் கருவிப்பெட்டியில் இருந்த கத்திதான்கொலை ஆயுதம் எனகூறப்பட்டது. அதை சுத்தம் செய்ய பள்ளிக்குள் கத்தியை எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

செப்டம்பர் 15ல் 2017ம் ஆண்டு காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் ஹரியானா அரசு இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது. செப்டம்பர் 2017ம் ஆண்டு பேருந்து நடத்துனர் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார்.

நவம்பர் 7ம் நாள் 2017ல் கொலை வழக்கு தொடர்பாக 11ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை ஒத்தி வைக்கும் முயற்சியாகத்தான் அந்த மாணவர் கொலை முயற்சி செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அந்த மாணவரை ’அடல்ட் ’ என கருத வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிலையில் பேருந்து நடத்துனருக்கு குர்கான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் மீதான குற்றத்தை சிபிஐ யிடம் நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என கூறி க்ளீன் சிட் வழங்கியது. இதைத் தொடர்ந்து வேன் ஓட்டுனரை 2018ல் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. தவறான நபரை கைது செய்ததாக கருத்தில் கொள்ளப்பட்டது.

டிசம்பர் 20, 2017ம் ஆண்டு சிறார் நீதி மன்றம் இளைஞரை வயது வந்தவராக கருதி அவரை குர்கான் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. 2018ம் ஆண்டு செசன்ஸ் நீதமன்றம் குழுவின் முடிவை உறுதி செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர் உடல், உளவியல் சார்ந்தது எனவே வயது வந்தவராக விசாரிக்கப்படுவதை தடுக்க போதிய சட்டம்  இல்லை என கூறியது எனவே 16 வயது மாணவனின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அக்டோபர் 2018ல் வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட நபர் வயதுடையவராகவோ இளம் வயதை உடையவர் என கருத வேண்டுமா என்பதை முடிவு செய்ய ஜே.ஜே.பிக்கு பஞ்சாப் , ஹரியான நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இந்த வழக்கை புதிதாக பரிசீலிக்க தடை விதித்தது. தற்போதைய நிலை நீடிக்கும் எனவே ஜுவைனைல் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் அந்த மாணவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Next Post

இப்டி பண்றீங்களே மா! :  நோயாளிக்கு ரத்த பிளாஸ்மாவிற்கு பதில், ரத்த வங்கி அளித்த சாத்துக்குடி ஜுஸ் ..

Thu Oct 20 , 2022
சாத்துக்குடி ஜுஸ் குடிங்க ரத்தம் நல்லா ஊறும்னு டாக்டர் சொல்லி கேட்டிருப்போம் . ஆனா, ரத்த பிளாஸ்விற்கு பதிலா ரத்த வங்கி சாத்துக்குடி ஜுஸ் வழங்கியத பார்த்துள்ளீர்களா ? .. அப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் இந்தியாவில் தான் நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இதனால் ரத்தத்தில் உள்ள பிளேட்டெலட்களின் தேவை அதிகரித்ள்ளது. இதை காரணமாக வைத்து போலி ரத்த வங்கிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளன. அலகாபாத்தை சேர்ந்தவர் பிரதீப் […]
FreshFrozenPlasma

You May Like