அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த 60 வயது முதியவர்..!! தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரம்..!!

அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை அண்ணாநகர் பகுதியில் 30 வயது பெண் ஒருவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அமைந்தகரை சேர்ந்த 60 வயதான முருகானந்தம் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு அந்தப் பெண் தனியாக இருந்த நிலையில், குடிபோதையில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தபெண் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பாலியல் பலாத்காரம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால், முருகானந்தத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த 60 வயது முதியவர்..!! தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரம்..!!

பின்னர் அதிலிருந்து அவர் ஜாமீனில் வெளிவந்தார். ஆனால், அதற்கான விசாரணை எழும்பூரில் உள்ள அல்லிக்குளம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி பருக் தீர்ப்பு வழங்கினார். அதில், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதத் தொகையும் விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். 

CHELLA

Next Post

’மெகா வேலைவாய்ப்பு..!! 75,000 இளைஞர்களுக்கு வேலை..!! பிரதமரின் சூப்பர் தீபாவளி பரிசு..!!

Fri Oct 21 , 2022
அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மெகா வேலை வாய்ப்பு மேளாவை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக மெகா வேலை வாய்ப்பு மேளாவை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதன் தொடக்க விழாவில் 75,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பணி […]
Job

You May Like