உஷார்.. குறைவான முதலீடு அதிக லாபம்.. ஆசைக்காட்டி ஏமாற்றிய ரியல் எஸ்டேட் ப்ராடு.!

புதுச்சேரி மாநிலம் கோரிமேட்டை சேர்ந்தவர் லூர்து பெலிக்ஸ் (வயது 38). இவருக்கு சங்கரன்பேட்டை காமன்கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (31) என்பவர் பதிதாக அறிமுகம் ஆகினார். ராஜசேகர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் , அதனால் பணம் கொடுத்தால் கூடுதல் பணம் தருவதாகவும் நம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளார்.


இதனை முழுவதுமாக உண்மை என்று நம்பிய லூர்துபெலிக்ஸ் தன்னிடம் இருந்த பணம் மற்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து ரூ.43 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் நகை ஆகியவற்றை ராஜசேகரிடம் கொடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் வாக்குறுதி அளித்ததுபோல் கூடுதல் பணம் தராததுடன் ராஜசேகர் தலைமறைவாகியுள்ளார். இதன் விளைவாக லூர்துபெலிக்ஸ் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் குற்றவாளிகளை வலைவீசி காவல்துறையினர் தேடிவந்த நிலையில் ராஜசேகர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அந்த விசாரணையின் போது போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, மோசடி செய்த பணத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் கார், டி.வி., ஏ.சி., என பலவற்றை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, காவல்துறை ராஜசேகரிடம் இருந்து கார், 13 பவுன் நகைகள், ஏ.சி., டி.வி., பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு வங்கிகளின் காசோலைகளை என பறிமுதல் செய்திருக்கின்றனர்.

1newsnationuser5

Next Post

ஒரு தலைக்காதல் மீண்டும்.. ஒரு கொடூர கொலை.. சுத்தியால் அடித்து நிகழ்ந்தேறிய சம்பவம்.!

Tue Oct 25 , 2022
ஒரு தலை காதலை ஏற்க மறுத்த மறுத்த இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் தலையை சுத்தியலால் தாக்கி, கத்தியால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து, கால்களையும் வெட்டி, வெறித்தனமாக இளைஞர் கொலைச் செய்துள்ளது கேரளாவை தாண்டி அதிர வைத்துள்ளது. இளம்பெண் விஷ்ணு பிரியாவை ஒரு தலையாய் காதலித்து வந்த இளைஞர் தொடர்ந்து தனது காதலைச் சொல்லியும், ஏற்க மறுத்ததால், […]
Screenshot 20221025 120118 646

You May Like