20 ஓவர் உலககோப்பை போட்டிநடைபெற்று வரும் நிலையில் இந்தியாவை வீழ்த்தினால், ஜிம்பாப்வேவை சேர்ந்த வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார் .
20 ஓவர் உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சேஹர் ஷின்வாரி என்ற நடிகை டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியா வரும் ஞாயிற்றுக்கிழமை கடைசி சூப்பர் 12 போட்டியில் விளையாட உள்ளது. இதில் ஜிம்பாப்வே அணியை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியை தவிர மற்ற போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்தாலும், கடைசி போட்டியில் கம்பீரமாக அரையிறுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் ஜிம்பாப்வே அணி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியுள்ளது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இன்னும் சில போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியை தழுவியுள்ளது.
இந்திய அணியை பெரும் நம்பிக்கையுடன் எதிர் கொள்ள உள்ள ஜிம்பாப்வே அணிக்கு தெம்பு கூட்டும் வகையில் இந்த நடிகையின் அறிவிப்பு உள்ளது.
இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது ஜிம்பாப்வே. தற்போது சேஹர் ஷின்வாரி அறிவிப்பு இந்தி அணியுடன் மோதும் போட்டியில் இந்த அணி இந்தியாவை வீழ்த்தினால் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஒருவர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியாகி வைரலாகி வருகின்றது.
எனினும் சிலர், கனவில் நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது திருமண ஆசையை விட்டு விடுங்கள் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர் இந்த வாய்ப்புக்காகவே இந்தியாவை வீழ்த்த வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.