சாலையோர கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சென்ற மாணவர் திடீரென மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 8-வது தெருவைச் சேர்ந்தவர் சீதாபதி. இவர் மகன் மகாவிஷ்ணு (21). தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். நேற்று முன்தினம் இவருடைய நண்பர் ராம்குமார் என்பவரின் பிறந்த நாளை ஒட்டி ரெட்டேரி பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு சென்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
மது அருந்தியபின்னர் சாலையோரக் கடையில் சிக்கன் ப்ரைட் ரைஸ் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சென்று படுத்து தூங்கிவிட்டார். இந்நிலையில் 11 மணி அளவில் எந்த சுயநினைவும் இன்றி படுத்திருந்ததை அவர் வீட்டில் கவனித்துள்ளனர். எழுப்பினால் கூட எழுந்திரிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருகில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள். சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் எம்.கே.பி. நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பினர். பெற்றோர்களிடம் விசாரித்ததில் மது அருந்திவிட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்டதாக தெரிவித்தனர். அறிக்கை வெளிவந்தபின்னரே என்ன காரணம் என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.