நாளை வெளியாகின்றது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்…

திருப்பதி திருமலையில் நாளை ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் வெளியாகின்றது.

திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் டிக்கெட், ரூ.500 ரூபாய் டிக்கெட், விஐபி தரிசனம் போன்ற பிரவுகளில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றது. இலவசமாக தரிசிக்க பக்தர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். கூடவே பிரசாதம் வழங்குவதற்கான டிக்கெட்டும் வழங்கப்படுகின்றது.


கடந்த வாரம் ரூ.300 டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இந்நிலையில் நாளை ரூ.500க்கான டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது. காலை 10 மணி அளவில் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 16ம் தேதி தங்கும் அறைகளுக்கான முன்பதிவு தொடங்குகின்றது.

திருப்பதி தரிசனம் செய்ய வரும் சாதாரண பக்தர்கள், திருப்பதியின் அலிபிரியில் இருக்கும் பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி 2வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் பக்தர்கள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளலாம்.தினமும் 10 ஆயிரம் வீதம் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரில் வழங்கப்படும் என்ற தகவலை திருமலா திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Post

இந்திய அணியின் கேப்டன் மாற்றம்?

Tue Nov 15 , 2022
இந்திய அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில் அது குறித்த சில தகவல்கள் வைரலாகி வருகின்றது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் விளையாட்டின் நடந்து முடிந்த போட்டியில் இந்தியா அரையிறுதியில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக இந்திய கேப்டனை மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் இந்த கோரிக்கை வழிமொழிந்தனர். இந்நிலையில் ஹர்திக்கை அடுத்த […]
hardik 1663833798760 1663833799025 1663833799025

You May Like