காரைக்குடி இரயில்வே சந்திப்பிலிருந்து புறப்பட்ட பல்லவன் விரைவு இரயில் , நேற்று நண்பகல் நேரத்தில் சென்னை எழும்பூருக்கு இரயில் நிலையத்தை வந்தடைந்தது.
பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு, வழக்கம் போல் ஆர்.பி.எஃப் காவலர் நிரஜ்குமார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சோதனை செய்துள்ளனர். இந்த நிலையில் ரயிலின் ஒரு டிராலி பை இருந்தது.
அதனை திறந்து பார்த்தபோது, 22 பவுன் தங்க நகைகள் மற்றும் இதன் ரூ.8.24 லட்சம் இருந்துள்ளது. இது பற்றி எழும்பூர் நடைமேடை அதிகாரியிடம் தகவல் தெரிவித்த பின்னர் பணத்தையும், நகைகளையும் ஒப்படைத்துள்ளார். இதனிடையே மதுரை பகுதியை சேர்ந்த ஜெரினா என்ற பெண், தன்னுடைய டிராலி பையை பல்லவன் விரைவு ரயிலில் தவறவிட்டேன் என ரயில் மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து , மேலாளர் விசாரித்த பின்னர், ஜெரினாவின் பைதான் என்று தெரிய வந்தது. மேலும், ஜெரினா மற்றும் கணவர் ஜாஃபர் உரிய ஆவணம் சமர்பித்து, அவர்களுக்கு சொந்தமான 22 பவுன் நகைகளுடன் பணத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
பையை எடுத்து வந்து உரியவரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்து ரயில்வே ஊழியர்களை மற்றும் ஆர்.பி.எஃப். காவலர் நீரஜ்குமார் பஸ்வான் ஆகியோரை சென்னை ரயில்வே மேலாளர் கணேஷ் மற்றும் ஆர்.பி.எஃப் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.