பெரும்பாலான பெண்கள் விரும்புவது பிறக்கப்போகும் குழந்தை வெள்ளையாகவும் கொழு கொழுன்னு அழகாகவும் பிறக்க வேண்டும் என்பதைத்தான். ஒருபுறம் ஜீன் காரணமாக இருந்தால் கூட இந்த உணவுப்பொருட்கள் வெள்ளையான குழந்தை பேறுக்கு உதவுகின்றது.
பெண்கள் கருவுற்று 4 மாதத்தில் இருந்தே இந்த உணவுப்பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கட்டாயம் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்கின்றனர். பெரும்பாலானோர் குங்குமப்பூ சாப்பிட்டு வர குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதை கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால், இதை சாப்பிட்டால் குழந்தை எடை அதிகரிக்கும் என கூறுவார்கள். அது உண்மையில்லை. இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பெண்களுக்கு நல்ல தீர்வாகும்.

அடுத்ததாக தேங்காய் இதில் உள்ள சத்துக்கள் குழந்தைக்கும் நேரடியாக செல்லும். தினமும் காலையில் சாப்பிடலாம். துருவிய தேங்காயை காய்களுடன் சேர்த்து சாப்பிட்டாலும் நல்ல பலன்தான்.

மூன்றாவதாக பாதாம் பருப்பு. இது குழந்தைகளின் மூளைக்கு மிகவும் நல்லது மேலும் நிறத்தை கூட்டுகின்றது. இரவு நேரத்தில் 5 பாதாம் ஊறவைத்துவிட்டு காலையில் தோல் உரித்த சாப்பிட்டு வரலாம்.

கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வருவதால் கருவில் உள்ள குழந்தைக்கு அதிக அளவில் நிறம் கூடும். எனவே தினமும் சாப்பிட்டு வரலாம். பகல் நேரத்தில் எடுத்துக் கொண்டால் சளிபிடிக்காது. சில பாட்டிகள் சளி பிடிக்கும் என்பதாலேயே சாப்பிட வேண்டாம் என எச்சரிப்பார்கள். ஆனால், பகலில் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். மகப்பேறு காலத்தில் எலும்புகளை வலுவாக்க நாட்டுக்கோழி முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வது பிரசவ வலியின்போது பெரும் உதவியாக இருக்கும்.