நடிகர் அப்பாஸ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு என்னதான் ஆச்சு என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படமான காதல் தேசம் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி ரசிகர்கள் மனதில் நின்றவர் நடிகர் அப்பாஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் காதல் தேசம் திரைப்படத்திற்கு பின்னர், தமிழில் காதல் வைரஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், மலபார் போலீஸ், படையப்பா, மின்னலே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நட்சத்திரமுமான நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.
கொல்கத்தாவில் பிறந்தவர். இவரது தந்தையும் பெங்காலியில் திரைப்படத்தில் நடித்தவர். பெங்களூருவில் இவர் இருந்தபோது இவர் மாடலிங் துறையில் கால் பதித்தார். பின்னர் தமிழில் ஆடிஷன் ஒன்றில் பங்கேற்றார். அதில் இயக்குனர் கதிரை மிகவும் கவர்ந்துவிட்டார். இதையடுத்து இயக்குனர் கதிர் இயக்கிய திரைப்படமான காதல் தேசத்தில் நடிக்க வைத்தார். இது மாபெரும் ஹிட் கொடுத்தது.
தமிழ் மொழியில் கடைசியாக 2009ல் மாதவன் நடிப்பில் ’குரு என் ஆளு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். பின்னர் ’ராமானுஜன்’ திரைப்படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்தார். இதையடுத்து அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவர் சமூக வலைத்தலங்களில் தனது வாழ்க்கைமுறை பற்றிஅவ்வப்போது பகிர்ந்துகொள்கின்றார்.
அந்த வகையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு திடீரென என்ன ஆச்சு என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்விகளை அடுக்கி வருகின்றனர். சமீபத்தில் ஒரு விபத்து நேர்ந்ததாகவும் இதனால் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.