மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழக நீலகிரியில் உள்ள கன்டோன்மென்ட் போர்டு வெலிங்டன் அலுவலகத்தில் 8ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளின் முழு விவரங்களை இங்குத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

பணியின் விவரங்கள்:
பணியின் பெயர் | பணியிடம் | சம்பளம் | கல்வித்தகுதி |
தூய்மை பணியாளர் (Safaiwala) | 4 | ரூ.15,700-50,000 | 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி |
எதிர்பார்க்கும் தகுதிகள்:
தூய்மை பணி செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அலுவலகம் தமிழ்நாட்டில் உள்ளதால் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் வயது 21 முதல் 33 வயது வரை இருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்குத் திறமை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம்:
தூய்மை பணியாளர் திறமை தேர்வுக்காக ரூ.150/- கட்டணமாகச் செலுத்த வேண்டும். SC/ST/Widow/DAP/Transgender பிரிவினருக்குத் தேர்வு கட்டணம் கிடையாது. கட்டணத்தை IMPS/NEFT/RTGS போன்றவற்றை உபயோகப்படுத்தி ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
பணம் செலுத்த வேண்டிய கணக்கு விவரம் :
Name: The Chief Executive Officer, Account No: 38748594809, IFSC Code: SBIN0000828, Bank: State Bank of India, Branch: Coonoor
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் Cantonment Board Wellington அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய: https://wellington.cantt.gov.in/recruitment/
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 02.12.2022 மாலை 5 மணி வரை