அச்சுறுத்தும் வானிலை..!! நாகை, காரைக்காலில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


தென்கிழக்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே சுமார் 600 கி.மீ. தொலைவிலும் காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே 630 கி.மீ.மற்றும் சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

அச்சுறுத்தும் வானிலை..!! நாகை, காரைக்காலில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

இதன் காரணமாக சென்னை, நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர் காற்றோடு மழை பெய்யக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளதை குறிக்கும் வகையில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடந்த ஒன்பதாம் தேதி குறைந்த தாழ்வு நிலை உருவாக்கக் கூடும் என்பதால் 7ஆம் தேதியே விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என மீன்வளத் துறையினர் அறிவித்திருந்தனர். அதற்கு முன்பாகவே நான்கு நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக இருந்த காரணத்தால் கடலுக்குச் செல்லாத விசைப்படகு மீனவர்கள் இன்று 19-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

அச்சுறுத்தும் வானிலை..!! நாகை, காரைக்காலில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமத்தைச் சேர்ந்த 700 விசைப் படகுகளும் 3000-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன் வரத்து இல்லாத காரணத்தால் நாகை மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

CHELLA

Next Post

#பல்லாவரம் : பிளஸ் 2 மாணவியால் பெற்றோருக்கு பேரதிர்ச்சி.!

Mon Nov 21 , 2022
பல்லாவரம் பகுதியில் எட்டியப்பன் தெருவில் டில்லிபாபு (56) தனது மனைவி மேனகா (50), 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார். டில்லிபாபு சென்னை பகுதியில் முத்தியால்பேட்டை அரசுப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மகள், அதே பள்ளியில் பிளஸ் 2 பயின்று வருகிறார். தினமும் பள்ளிக்கு பல்லாவரத்தில் இருந்து தந்தையுடன் ரயிலில் சென்று வந்திருக்கிறார்.  இந்த நிலையில், பள்ளியில் தேர்வு நடந்து வருவதனையொட்டி, மாணவி […]
இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்..! ஹோட்டலில் பலான வேலைகளை பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி..!

You May Like