பள்ளி கழிவறையில் 15 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிண்டி மாவட்டத்தில் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையை வீசிச்சென்றது 15 வயது சிறுமி என்று கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த சிறுமியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட கழிவறையில் குழந்தை பெற்றெடுத்து, குழந்தையை ஆள்நடமாட்டமற்ற பாலைவன பகுதியில் வீசி சென்றதை ஒப்புக்கொண்டார்.

மேலும், சிறுமி தனது பாட்டியின் கிராமத்திற்கு கடந்த ஓராண்டாக அவ்வப்போது சென்று வந்துள்ளார். அப்போது, பாட்டியின் கிராமத்தை சேர்ந்த 21 வயது இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாட்டி கிராமத்திற்கு செல்லும் போதெல்லாம் சிறுமியை அந்த இளைஞர் பலாத்காரம் செய்துள்ளான். இதனால், அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில், சிறுமியை கர்ப்பமாக்கிய 21 வயது இளைஞர் தலைமறைவாக உள்ள நிலையில், அவனை தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுமி பெற்றெடுத்த குழந்தை தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.