கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. ஆனால், இந்தாண்டு அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில், தமிழகத்தில் அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
![டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி திடீர் மாற்றம்..!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/03/TNPSC.png)
இந்நிலையில், தற்போது கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் நவம்பர் 7ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதித் தேர்வு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் டிசம்பர் மாதம் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.