fbpx

டிசம்பர் 6, இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. சாமி வீதியுலாவை பக்தர்கள் தினமும் கண்டு மகிழ்கின்றனர். இந்த விழாவின் 10ஆம் நாளான டிசம்பர் 6 திருக்கார்த்திகை தீபம் அன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். இதனையொட்டி பொதுமக்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் விளக்கேற்றி கார்த்திகை தீபத்தை கொண்டாடுவர்.

இந்நிலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வருகிற டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது

Kathir

Next Post

வாலுடன் பிறந்த பெண் குழந்தை!!! மருத்துவர்கள் கூறுவது என்ன?

Wed Nov 30 , 2022
இந்த உலகில் வினோத நிகழ்வுகள் ஆங்கங்கே நடப்பது அரிது, அப்படிப்பட்ட வினோத நிகழ்வுகள் மருத்துவ துறையையும் விட்டுவைப்பதில்லை, ஒரு குழந்தைக்கு இரண்டு தலைகள், கொம்புகள் வைத்திருக்கும் குழந்தை, வாலுடன் பிறந்த குழந்தை போன்ற வினோத நிகழ்வும் நடந்திருக்கிறது, இதற்கு என்ன காரணம் என்று மருத்துவ உலகத்துக்கே அறிய முடியவில்லை. அப்படி ஒரு வினோத நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது. மெக்சிகோவின் நியூவோ லியான் மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு […]

You May Like