fbpx

பொங்கல் பரிசுத் தொகுப்பு வேண்டுமா..? அப்படினா கண்டிப்பா இதை செய்யுங்க..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் கடைபிடித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகை ஆன்லைன் மூலமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் குறித்த கணக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர். அப்போது நிறைய பேர் வங்கிக் கணக்கு இல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வேண்டுமா..? அப்படினா கண்டிப்பா இதை செய்யுங்க..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

அந்த வகையில், தமிழகத்தில் சுமார் 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அனைத்து ரேஷன் கடை நிர்வாகிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரேஷன் அட்டை பயனாளிகள் வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்தால் அவர்களை உடனடியாக மத்திய கூட்டுறவு வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டில் வங்கிக் கணக்கை தொடங்க அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் வங்கிக் கணக்கு எண், வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம் உள்ளிட்டவைகளை ரேஷன் கடை ஊழியர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

காதலி மற்றொரு நபருடன் 'டேட்டிங்' செய்ததால் காதலனே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூரம்..!

Sat Dec 3 , 2022
சட்டீஸ்கர் மாநில பகுதியில் கோர்பா மாவட்டதில் வசிக்கும் தனு குர்ரே என்பவர் சச்சின் அகர்வால் என்பவரை காதலித்து வந்துள்ளார். சென்ற 21ம் தேதி, தனு குர்ரேவின் செல்போனானது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  பல இடங்களில் தேடியும் தனு குர்ரே கிடைக்காததால், பாண்டிரி காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து தனு குர்ரேவை தேடி வந்தனர். அத்துடன் […]
சொந்த ஊருக்கு திரும்பிய உடனே..!! நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு..!! பதறியடித்து ஓடிய உறவினர்கள்..!! அதிர்ச்சி

You May Like