மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் தன்னாட்சி அமைப்பான ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட் (NIRD & PR) ஐதராபாத் ஆகும். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட் ஆனது ஊரக வளர்ச்சியில் பயிற்சி, ஆராய்ச்சி, நடவடிக்கை ஆராய்ச்சி மற்றும் கன்சல்டன்சி செயல்பாடுகளை மேற்கொள்கிறது.
![மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் சூப்பர் வேலை..!! மாதம் ரூ.67,000 வரை சம்பளம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/central-govt-jobs-1-1598945180.jpg)
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணி டெபுடேசன் மற்றும் நேரடி ஆள்சேர்ப்பு வகையில் நிரப்பப்படவுள்ளது.
பணியின் முழு விவரங்கள்:
பதவியின் பெயர் | டைரக்டர் ஜெனரல் |
சம்பளம் | ரூ.37,400-67,000 + GP ரூ.10,000 |
வயது வரம்பு | நேரடி நியமனத்திற்கு 50 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும். டெபுடேசன் பிரிவில் 56 வயது அதிகபட்சமாக இருக்கலாம். |
கல்வித்தகுதி:
டெபுடேசன் பிரிவில் தேர்வு செய்ய குருப் அ பிரிவில் அரசின் பணி புரிந்திருக்க வேண்டும். நேரடி நியமனத்திற்கு சமூக அறிவியல் பிரிவில் Ph.D., பெற்றிருக்க வேண்டும். மேலும் 15 ஆண்டு அனுபவம் தேவை.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பதார்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் அதிகரிக்கும் நிலையில், நேர்காணல் நடத்தப்படலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய: https://nirdpr.org.in/
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர் (பயிற்சி), ஊரக வளர்ச்சி அமைச்சகம், ஊரக வளர்ச்சித் துறை, கோர் – 4B(UG), இந்தியா வசிப்பிட மையம், லோதி ரோடு, புதுடெல்லி – 110003.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.12.2022